அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 6.4.21 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு அதிமுக தனது முழு ஆதரவை வழங்கும் என்று தெரிவித்துள்ளது.
அதிமுக-பாஜக உடன்படிக்கையில்,
“6.4.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், பாஜகவுக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், பாஜகவுக்கு தமிழ்நாட்டில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 6.4.21 அன்று இடைத்தேதல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு, அதிமுக தனது முழு ஆதரவு அளிக்கும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.