Coronavirus Editorial News Fashion Gadgets

ஒடிசாவில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்த தங்க மனிதன்

ஒடிசாவில் தங்க மனிதன் என்று அழைக்கப்படும் தொழிலதிபர் 3.5 லட்சம் ரூபாய் மிதிப்பிலான தங்க முகக் கவசத்தை வாங்கி அணிந்து வருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முகக்கவசம் அணிய அரசு வலியுறுத்தியுள்ளது. நிறுவனங்கள் வித்தியாசமான ஸ்டைலில் முகக்கவசத்தை தயாரிக்க தொடங்கின. மக்களும் அதை விரும்பி அணிந்து வருகின்றனர்.

புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுமார் 3 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட தங்க மாஸ்க் அணிந்து காட்சியளித்தார். ஷங்கர் குராடே என்ற அந்த தொழிலதிபர் இந்தியா முழுவதும் பேசும்பொருளாகினார்.

தற்போது அவரால் ஈர்க்கப்பட்ட ஒடிசா மாநிலம் கட்டாக்கில் தங்க மனிதன் என்று அழைக்கப்படும் அலோக் மொகந்தியும் தங்க முகக்கவசம் அணி விரும்பினார். அவர் 3.25 லட்சம் ரூபாய் செலவில் தங்க இழைகளால் தயாரிக்கப்பட்ட என-95 முகக்கவசத்தை அணிந்து வருகிறார்.

இதுகுறித்து அலோக் மொகந்தி கூறுகையில் ‘‘நான் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவர் தங்கத்திலான முகக் கவசம் அணிந்திருந்ததை டி.வி.யில் பார்த்தேன். எனக்கும் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் இருப்பதால் அவர் வாங்கிய அதே இடத்தில் முகக்கவசம் தயாரிக்க கூறினேன்.

நான் அணியும் என்-95 மாஸ் 90 முதல் 100 கிராம் வரையிலான தங்க இழைகளால் தயாரிக்கப்பட்டது. அதில் மூச்சு விடுவதற்கான சிறிய துளை உள்ளது. அது எனக்கு வசதியாக இருக்கிறது.

மக்கள் என்னை தங்க மனிதன் என்று அழைப்பார்கள். ஏனென்றால், நான் தங்கத்தை விரும்புகிறவன். கடந்த 40 ஆண்டுகளாக தங்கள் அணிந்து வருகிறேன். மும்பை நபர் மாஸ்க் அணிந்ததை பார்த்ததும் நானும் அவ்வாறு அணிய விரும்பினேன்’’ என்றார்.

Picture: ANI!

Related posts

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Penbugs

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா உறுதி மற்றும் இன்று 987 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

India’s 2nd lunar mission, Chandrayaan-2 launched from Sriharikota

Penbugs

சமூக இடைவெளியுடன் பேருந்து இருக்கை: ஆந்திராவில் அசத்தல்…!

Kesavan Madumathy

தந்தை உடல் தகனம்: வீட்டிலிருந்தே இறுதி மரியாதை செலுத்திய யோகி ஆதித்யநாத்

Kesavan Madumathy

Unnao Rape survivor’s lawyer, who survived the car crash last year, dies

Penbugs

George Floyd death: 3 more cops to be charged for the murder

Penbugs

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Kesavan Madumathy

Ministers Back In Offices From Monday As PM Alters Lockdown Tactic: Sources

Penbugs

கண்கலங்கிய ஸ்டாலின் ; ஜெ. அன்பழகன் படம் அறிவாலயத்தில் திறப்பு

Penbugs

குழந்தைக்குப் பால் வாங்கி வர ஓடிய ரயில்வே பாதுகாப்புப்படை காவலருக்கு குவியும் பாராட்டுகள் !

Penbugs

திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி

Penbugs

Leave a Comment