Coronavirus Editorial News Fashion Gadgets

ஒடிசாவில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்த தங்க மனிதன்

ஒடிசாவில் தங்க மனிதன் என்று அழைக்கப்படும் தொழிலதிபர் 3.5 லட்சம் ரூபாய் மிதிப்பிலான தங்க முகக் கவசத்தை வாங்கி அணிந்து வருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முகக்கவசம் அணிய அரசு வலியுறுத்தியுள்ளது. நிறுவனங்கள் வித்தியாசமான ஸ்டைலில் முகக்கவசத்தை தயாரிக்க தொடங்கின. மக்களும் அதை விரும்பி அணிந்து வருகின்றனர்.

புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுமார் 3 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட தங்க மாஸ்க் அணிந்து காட்சியளித்தார். ஷங்கர் குராடே என்ற அந்த தொழிலதிபர் இந்தியா முழுவதும் பேசும்பொருளாகினார்.

தற்போது அவரால் ஈர்க்கப்பட்ட ஒடிசா மாநிலம் கட்டாக்கில் தங்க மனிதன் என்று அழைக்கப்படும் அலோக் மொகந்தியும் தங்க முகக்கவசம் அணி விரும்பினார். அவர் 3.25 லட்சம் ரூபாய் செலவில் தங்க இழைகளால் தயாரிக்கப்பட்ட என-95 முகக்கவசத்தை அணிந்து வருகிறார்.

இதுகுறித்து அலோக் மொகந்தி கூறுகையில் ‘‘நான் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவர் தங்கத்திலான முகக் கவசம் அணிந்திருந்ததை டி.வி.யில் பார்த்தேன். எனக்கும் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் இருப்பதால் அவர் வாங்கிய அதே இடத்தில் முகக்கவசம் தயாரிக்க கூறினேன்.

நான் அணியும் என்-95 மாஸ் 90 முதல் 100 கிராம் வரையிலான தங்க இழைகளால் தயாரிக்கப்பட்டது. அதில் மூச்சு விடுவதற்கான சிறிய துளை உள்ளது. அது எனக்கு வசதியாக இருக்கிறது.

மக்கள் என்னை தங்க மனிதன் என்று அழைப்பார்கள். ஏனென்றால், நான் தங்கத்தை விரும்புகிறவன். கடந்த 40 ஆண்டுகளாக தங்கள் அணிந்து வருகிறேன். மும்பை நபர் மாஸ்க் அணிந்ததை பார்த்ததும் நானும் அவ்வாறு அணிய விரும்பினேன்’’ என்றார்.

Picture: ANI!

Related posts

COVID19: Sonu Sood contributes 25,000 face shields for Maharashtra Police

Penbugs

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு

Kesavan Madumathy

திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று ஆய்வு!

Penbugs

COVID19: Punjab becomes 2nd state to extend Coronavirus lockdown

Penbugs

அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்…!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2325 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Foot-operated flushes: Railways customizes coaches for post-COVID19 travel

Penbugs

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

ARR reacts to Khatija-Taslima face-off; says it’s her choice to wear burqa

Penbugs

Actor Gayatri lodges complaint against pizza delivery boy for sharing her number on ‘adult’ groups

Penbugs

COVID-19: Meet DRV, a Disaster Management Organisation working tirelessly to help people

Penbugs

தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு- எடப்பாடி கே. பழனிசாமி

Kesavan Madumathy

Leave a Comment