உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளையும் சின்னாபின்னமாக்கியுள்ளது.
மனிதனை தாக்கும் கொரோனா வைரஸ் விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டன, ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரான்க்ஸ் (Bronx) பூங்காவில் 4 வயது பெண் புலிக்கு கொரோனா நோய்த்தொற்று முதன்முதலில் உறுதி செய்யப்பட்டது .அதை தொடர்ந்து விலங்குகள் மீதான கொரோனா ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் கர்நாடகாவில் ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் வளர்த்து வரும் சில ஆடுகளுக்கு சுவாசப் பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் சுமார் 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவுகின்றனவா என விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.