Cinema

அடுத்த படம் மகேஷ்பாபுவுடன் : ராஜமவுலி அறிவிப்பு

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் இருவரையும் வைத்து ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இந்தப்படத்தின் முக்கால்வாசி பணிகள் முடிவடைந்து, வரும் 2021 ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில் தனது அடுத்த படத்தில் மகேஷ்பாபுவுடன் கூட்டணி சேர இருப்பதாக அறிவித்துள்ளார் ராஜமவுலி. ஒரு பிரபல சேனலுக்கு இன்று அவர் அளித்துள்ள பேட்டியில் மகேஷ்பாபுவுக்காக தான் ஸ்கிரிப்ட் தயார் செய்து வருவதாக வெளிப்படையாகவே கூறியுள்ளார்..

பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இவர்கள் எல்லோருமே இயக்குநர் ராஜமவுலி நம்பர் ஒன் ஸ்தானத்திற்கு வரும் முன்பே ஏற்கனவே ஒருமுறை அவருடன் இணைந்து பணியாற்றியவர்கள் தான்.. இப்போது இரண்டாம் முறையாக அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து பிரமாண்ட படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆனால் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான மகேஷ்பாபு இப்போதுவரை ராஜமவுலியின் டைரக்சனில் நடிக்காதது அவரது ரசிகர்களின் பெரும் மனக்குறையாக இருந்து வந்தது. ராஜமவுலியின் இந்த அறிவிப்பால் உற்சாகத்தில் மிதக்கிறார்கள் மகேஷ்பாபு ரசிகர்கள்.

Related posts

Poster of STR and Hansika’s Maha

Penbugs

Yogi Babu opens up about his marriage

Penbugs

Soorarai Pottru to have a digital release on October 30

Penbugs

Raghava Lawrence opts out of Laxmi Bomb, Hindi remake of Kanchana as he feels disrepected!

Penbugs

கர்ணன் – உரிமைக்காக களம் கண்டவன்!!!

Shiva Chelliah

Oh My, Ayushmann!

Penbugs

சென்னையில் புதிய ஸ்டுடியோவில் தனது பணிகளை தொடங்கினார் இளையராஜா

Penbugs

Vijay Sethupathi confirms collaboration with Aamir Khan

Penbugs

ஆமிர்கானின் உதவியாளர்‌ மரணம் : இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஆமிர்

Penbugs

என் விதை நீ ,என் விருட்சம் நீ : சூர்யாவை உச்சி முகர்ந்த இயக்குநர் வசந்த்

Penbugs

Toxic environment: The Ellen Show is under investigation

Penbugs

The first single, Rowdy Baby from Maari 2

Penbugs