Editorial News

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59இல் இருந்து 60ஆக உயர்த்தப்படுவதாகவும் அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கல்வி நிறுவன ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. இந்த வயது வரம்பை கொரோனா காலத்தில் கடந்த ஆண்டு 59ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

Sourav Ganguly admitted to hospital

Penbugs

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் நடிகை குஷ்பு

Penbugs

Bigg Boss Tamil 4, Day 34, Written Updates

Lakshmi Muthiah

குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல் ; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Penbugs

தேர்வின்றி ஆல் பாஸ் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்

Kesavan Madumathy

Vijay Sethupathi’s Bollywood Debut Film Poster is Here!

Anjali Raga Jammy

விவேக் எங்கும் சென்றுவிடவில்லை: நடிகர் வடிவேலு

Penbugs

TN man uploads wife’s private photos on social media demanding dowry, arrested

Penbugs

உறுதியானது திமுக – விசிக கூட்டணி ; 6 தொகுதிகள் ஒதுக்கீடு..!

Penbugs

சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

Paris City Hall fined for having too many women in top jobs

Penbugs

Leave a Comment