Editorial News

சென்னை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக இடமாற்றம்…!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும், கோயம்பேடு சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சமூக இடைவெளியை ஒருவரும் கடைபிடிக்கவில்லை.

சந்தையில் வியாபாரிகள், தொழிலாளர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்று வேகமாக பரவியது. இதைத் தொடர்ந்து, கோயம்பேடு சந்தையை வேறுஇடத்துக்கு மாற்ற அரசு அறிவுறுத்தியது. இதன்படி, கோயம்பேடு பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, புறநகர் வியாபாரிகள் திருமழிசை சென்று காய்கறிகள் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமழிசையில் வரும் 7 ஆம் தேதி முதல் சந்தை செயல்படும் என்று கூறப்படுகிறது.

Related posts

Real Madrid lifts La Liga title

Penbugs

What caused the locust outbreak?

Penbugs

Protest breaks in Minneapolis streets after George Floyd dies following police encounter

Penbugs

டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ், இ-ஆர்சி புக் இனி சட்டப்படி செல்லும்

Penbugs

Accused Cop Has Been Arrested in Twin Murder Case

Lakshmi Muthiah

Outrage in Columbia as soldiers admits rape of 13YO girl

Penbugs

A 96-year-old World War II veteran becomes Italy’s oldest student

Penbugs

Hyderabad Vet murder case: All four accused shot dead

Penbugs

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா…!

Penbugs

ம.பி.யில் 750 மெகாவாட் சூரிய மின்திட்டம் – பிரதமர் மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கிறார்

Penbugs

Trump nominates Indian-American Attorney Saritha Komatireddy as US Federal Court judge

Penbugs