Coronavirus

கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு சோதனை துவக்கம்

இந்தியாவின் முதலாவது உள்நாட்டு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் சோதனையை நடத்த ஐசிஎம்ஆர் தேர்ந்தெடுத்துள்ள 12 நிறுவனங்களில் ஒன்றான டெல்லி எய்ம்சில், ஐந்து பேருக்கு முதற்கட்ட சோதனை இன்று துவக்கப்படுகிறது.

டெல்லி எய்ம்சில் ஆரோக்கியமான 100 நபர்களிடம் முதற்கட்ட சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க உள்ளவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்து கொண்டிருப்பதாவும், எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் தடுப்பூசி சோதனைகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் பத்து பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு அதில் கிடைக்கும் முடிவுகளை எய்ம்ஸ் மருத்துவமனையின் நெறிமுறை குழுவினர் ஆராய்ந்த பின்னர் எஞ்சியவர்களுக்கு சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

இதனிடையே தடுப்பூசி சோதனைக்கு தாமாக முன்வந்துள்ள 3500 பேருக்கு நீரிழிவு, ரத்தகொதிப்பு, சிறுநீரக நோய்கள், இருதய-கல்லீரல் பிரச்சனைகள் உள்ளனவா என சுமார் 50 வகையான பரிசோதனைகள் நடத்தப்பட்டு அவர்கள் சோதனைக்கு தகுதியானவர்களாக இருப்பது உறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் துணையுடன் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

Related posts

England clinch the first Test against Pakistan

Penbugs

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2376 ஆக உயர்வு

Penbugs

Air India Express: Pilot and Co-pilot dead after crash

Penbugs

தமிழகத்திலிருந்து முதல் சிறப்பு ரயில்!’ -ஜார்க்கண்ட் அனுப்பிவைக்கப்பட்ட 1,140 பேர்

Penbugs

பீக் ஹவர்ஸை தவிர மற்ற நேரங்களில் பயணிகள் செல்ல அனுமதி

Kesavan Madumathy

எஸ்.பி.பி. பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் – நடிகர் சல்மான்கான்

Penbugs

கொரோனா சோதனையை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்..!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று மட்டும் 3581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Ex-Bangladesh cricketer Nafees Iqbal tested positive for COVID19

Penbugs

Sonu Sood helps Suresh Raina by arranging oxygen cylinder for his aunt

Penbugs

COVID19: Srabani Nanda becomes 1st Indian athlete to return to competition

Penbugs

Sonu Sood airlifts 177 girls stuck in Kerala

Penbugs

Leave a Comment