Coronavirus

தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இரவு 10 மணி வரை அனைத்து கடைகளையும், வணிக வளாகங்களையும் திறக்க அளிக்கப்பட்ட அனுமதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டு இரவு 9 மணி வரை மட்டும் கடைகள், வணிக வளாகங்களை திறந்து வைக்க தமிழக அரசு அனுமதித்திருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் பண்டிகைக் காலம், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுப்பது, நோய் தொற்றின் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கடைகளை கூடுதல் நேரம் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, இன்று முதல் இரவு 10 மணி வரை அனைத்து கடைகளையும், வணிகவளாகங்களையும் திறந்து வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.

முழுக் கட்டுப்பாட்டு பகுதி தவிர்த்த மற்ற பகுதிகளில் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் இரவு 10 மணி வரை இயங்கலாம்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென, அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது

Related posts

COVID19: Karnataka students climb hill for internet for online classes

Penbugs

விவேக் எங்கும் சென்றுவிடவில்லை: நடிகர் வடிவேலு

Penbugs

பிரதமா் மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

Penbugs

இதுவரை தமிழகத்தில்7.75 லட்சம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம்

Penbugs

தமிழகத்தில் இன்று 5717 பேர் டிஸ்சார்ஜ்!

Penbugs

Karun Nair recovers from COVID19

Penbugs

ஒரே நாளில் 1,600-ஐ தாண்டிய கொரோனா நோய் தொற்று

Penbugs

கடந்த 24 மணி நேரத்தில் 4163 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்

Kesavan Madumathy

குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல் ; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Penbugs

Indian midfielder Indhumathi Kathiresan dons different uniform, fights COVID19 from frontline

Penbugs

COVID19: Sonu Sood contributes 25,000 face shields for Maharashtra Police

Penbugs

இரண்டு‌ அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா

Penbugs

Leave a Comment