ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
பொருள் :
தவ வலிமை உடையவரின் வலிமை ;
பசியை பொறுத்துக் கொள்ளுதலாகும்,
அதுவும் அப்பசியை உணவு கொடுத்து
மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப்
பிற்பட்டதாகும்,
இக்குறள் ரமலான் மாதத்தில்
மாசற்ற நோன்பு இருந்து
இயலாதோருக்கு கொடுத்து வந்து
இறைவனின் நாட்டம் கொண்டு
சக உயிரின் பசியை போக்கும்
ஒவ்வோரு இஸ்லாம் தோழமைக்கும்
பொருந்தும்,
உளமார முன்னிறுத்தி
உலகாளும் இறைவனுடன்
உரையாடும் ஓர் உன்னத தருணம்,
படைப்புகளை தவிர்த்து
படைத்தவன் பார்க்கும்
பக்குவம் தரும் பயிற்சி,
சமாதானம்,சமத்துவம்,
சகோதரத்துவம் நிலைக்க
இதயம் கனிந்த ஈகை
திருநாள் வாழ்த்துக்கள்..!!
எழுத்து : ரேஷ்மா
(கேட்டவுடன் எழுதி கொடுத்தமைக்கு நன்றி)
புகைப்படம் உதவி : வசந்த் S