Coronavirus Editorial News

இந்தியாவில் கொரோனாவை தடுக்க முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல்

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து ஒன்றுக்கு மனித சோதனைக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது.

கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க உலகம் முழுக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. இது தற்போது பெரிய போட்டியாகவே மாறியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தற்போது தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.

ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த மருந்து உலக அளவில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்கள்.

ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள இந்த மருத்துக்கு கோவாசின் (COVAXIN) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்பட்டு சோதனை செய்யப்பட்டு வரும் முதல் கொரோனா வைரஸ் சோதனை மருந்து ஆகும் இது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை பரத் பயோடெக் நிறுவனம் உடன் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த சில மாதங்களாக SARS-CoV-2ல் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வந்தது. மட்டுப்படுத்தப்பட்ட SARS-CoV-2 வைரஸில் இருந்து இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த தடுப்பு மருந்தில் தீவிரமான சோதனைகளை செய்து இருக்கிறார்கள். இதுவரை செய்யப்பட்ட சோதனைகள் நல்ல முடிவை கொடுத்துள்ளது .அந்த நிறுவனத்தில் இருக்கும் BSL-3 (Bio-Safety Level 3) சோதனை கூடத்தில் மிகுந்த பாதுகாப்பிற்கு இடையில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதனால் மனிதர்கள் மீது சோதனை நடத்த இந்த மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் இதன் சோதனைகள் தொடங்கும் என்கிறார்கள். இந்த கோவாசின் (COVAXIN)ஐ உருவாக்காகி இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் இதற்கு முன் போலியோ, ரேபிஸ், ஜாப்பனீஸ் என்சிபிலிட்டிஸ், சிக்கன்குன்யா, சிகா ஆகிய வைரஸ்களுக்கு மருந்து கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது .

Related posts

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Kesavan Madumathy

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி

Penbugs

4.90 லட்சம் கிலோ மருத்துவ கழிவுகள் அகற்றி அழிப்பு – மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

Penbugs

எகிப்தில் அரங்கேறிய கொரோனா காதல்!

Anjali Raga Jammy

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம்- இத்தாலி அறிவிப்பு !

Penbugs

Hotel Saravana Bhavan owner Rajagopal sentenced for life!

Penbugs

Ajith-mentored Team Dhaksha uses drone to disinfect places

Penbugs

Murdered teen paid moving tribute by his soccer teammates in Mexico

Gomesh Shanmugavelayutham

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Kesavan Madumathy

கொரோனா – சென்னையில் தனியார் தொலைக்காட்சி மூடல்

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 600 பேருக்கு கொரோனா உறுதி!

Penbugs

COVID19: Sussanne temporarily moves in with Hrithik to co-parent sons

Penbugs