Penbugs
CoronavirusEditorial News

இந்தியாவில் கொரோனாவை தடுக்க முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல்

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து ஒன்றுக்கு மனித சோதனைக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது.

கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க உலகம் முழுக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. இது தற்போது பெரிய போட்டியாகவே மாறியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தற்போது தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.

ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த மருந்து உலக அளவில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்கள்.

ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள இந்த மருத்துக்கு கோவாசின் (COVAXIN) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்பட்டு சோதனை செய்யப்பட்டு வரும் முதல் கொரோனா வைரஸ் சோதனை மருந்து ஆகும் இது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை பரத் பயோடெக் நிறுவனம் உடன் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த சில மாதங்களாக SARS-CoV-2ல் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வந்தது. மட்டுப்படுத்தப்பட்ட SARS-CoV-2 வைரஸில் இருந்து இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த தடுப்பு மருந்தில் தீவிரமான சோதனைகளை செய்து இருக்கிறார்கள். இதுவரை செய்யப்பட்ட சோதனைகள் நல்ல முடிவை கொடுத்துள்ளது .அந்த நிறுவனத்தில் இருக்கும் BSL-3 (Bio-Safety Level 3) சோதனை கூடத்தில் மிகுந்த பாதுகாப்பிற்கு இடையில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதனால் மனிதர்கள் மீது சோதனை நடத்த இந்த மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் இதன் சோதனைகள் தொடங்கும் என்கிறார்கள். இந்த கோவாசின் (COVAXIN)ஐ உருவாக்காகி இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் இதற்கு முன் போலியோ, ரேபிஸ், ஜாப்பனீஸ் என்சிபிலிட்டிஸ், சிக்கன்குன்யா, சிகா ஆகிய வைரஸ்களுக்கு மருந்து கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது .

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வுகள் ; உயர்கல்வித்துறை அறிவிப்பு

Penbugs