Coronavirus Editorial News

இனி ஆன்லைனில் மீன் வாங்கலாம் – இணையதள செயலியை அறிமுகப்படுத்திய மீன்வளத்துறை

Meengal என்ற கைபேசி செயலி ஒன்றும் புதிதாக உருவாக்கப்பட்டு தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மீன்களை ஆர்டர் செய்தால் வீட்டிற்கே கொண்டு வந்து தரும் வகையில் புதிய இணையதளம் மற்றும் செயலியை மீன்வளத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து வீட்டில் இருந்து வெளியே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எளிதாக கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக வார இறுதி நாட்களில் இறைச்சிக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகளில் செயல்படவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் சார்பில் மீன்களை ஆன்லைன் அல்லது ஆப் வாயிலாக பொதுமக்கள் வாங்கிக்கொள்ளும் வகையில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தடுப்பினை முன்னிட்டு செயல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் www.meengal.com என்ற இணையதளத்தினை பல்வேறு கூடுதல் வசதிகளுடன் பொது மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தி, Meengal என்ற கைபேசி செயலி ஒன்றும் புதிதாக உருவாக்கப்பட்டு தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் மற்றும் செயலி வழியாக சென்னை மாநகரில் செயல்படும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தின் சாந்தோம், தேனாம்பேட்டை, அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் மீன் அங்காடிகளின் வழியாக அந்தந்த அங்காடிகளின் 5 கி. மீ. சுற்றளவில் உள்ள பொது மக்கள் பயன்பெறும் வகையில், தற்போதைய ஊரடங்கு காலத்தில் தினமும் காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தரமான மீன்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று விநியோகம் செய்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

New ‘swine flu’ virus with pandemic potential identified in China

Penbugs

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Kesavan Madumathy

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படும் : துணை முதலமைச்சர்

Penbugs

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிப் பாடத் திட்டம் ; எம் ஃபில் படிப்புகள் நிறுத்தம்

Penbugs

கொரோனாவுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக போராட வேண்டும்; பிரதமர் மோடி

Penbugs

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

Janata curfew is just beginning: PM Modi

Penbugs

That was an emotional time: Williamson about WC 19 final

Penbugs

COVID19 in Chennai: Complete lockdown from 26th to 29th!

Penbugs

தமிழகத்தில் 3,645 பேர் கொரோனாவால் பாதிப்பு

Kesavan Madumathy

மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்- தமிழக அரசு

Penbugs