Editorial News Editorial News

குடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்

குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமரின் பயன்பாட்டுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஏர் இந்தியா ஒன் போயிங் விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.

இந்தியாவில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் வெளிநாடு பயணங்களுக்கு ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் வெளிநாடு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் விவிஐபி விமானங்களை போலவே, இந்தியா தலைவர்களுக்கு விமானங்கள் வாங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி, அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட போயிங் 777-300 ER ரக இரண்டு விமானங்களை போயிங் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், விவிஐபி ஏர் இந்தியா ஒன் ரகத்தின் முதல் விமானம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்டு, 13 ஆயிரம் கிலோ மீட்டர் இடைநிறுத்தாமல் டெல்லி வந்தடைந்தது.

சிறப்பம்சங்கள் :

143 டன் எடை கொண்ட இந்த விமானம் 43,100 அடி உயரம் வரை பறக்கும்
திறன்கொண்டது.

படுக்கை அறை, கூட்ட அரங்கு, மருத்துவக்குழு தங்கும்
அறை, அறுவை சிகிச்சை அறை, சமையல் அறை, பாதுகாப்பு வீரர்கள்
தங்கும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

பிரமாண்டமான இந்த விமானத்தில் GE90-115BL இரட்டை இன்ஜின்கள்
பொருத்தப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய விமான எஞ்சின்களில் இந்த
ரகமும் ஒன்று.

அமெரிக்க அதிபருக்காக பயன்படுத்தப்படும் போயிங் 747-200பி விமானத்தில்
இருக்கும் அதே ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு கவச தொழில்நுட்பம் இந்த
இரண்டு விமானங்களிலும் கொடுக்கப்பட இருக்கிறது.

ஏர் இந்தியா ஒன் விமானத்தின் ஸ்பெஷலே ஏவுகணையால் அதைச்
சுட்டுவீழ்த்த முடியாது.

இந்தியாவில் (SPS)
தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட முதல் இந்திய விமானங்கள் இவைதான்.

இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்டால், எதிரிகளின் ரேடார்களைச்
செயலிழக்க வைக்கமுடியும்.

Related posts

COVID-19: Chennai Corporation’s containment plan

Penbugs

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு

Penbugs

1st look of Nithya Menen in Gamanam

Penbugs

Former Foreign Minister Sushma Swaraj passes away at 67

Penbugs

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

Penbugs

மே 15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ 2000 நிவாரணம்

Kesavan Madumathy

டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற தன் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர் தந்தை!

Penbugs

Odisha: Police suspended for repeatedly raping 13YO girl

Penbugs

Mayank becomes youngest Indian judge at 21

Penbugs

டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படும் – தமிழக அரசு!

Kesavan Madumathy

இந்தியாவில் மக்கள் வாழ சிறந்த நகரங்களில் நான்காவது இடம் பிடித்த சென்னை ..!

Kesavan Madumathy

Massive fire breaks out at UAE’s Ajman market

Penbugs

Leave a Comment