Editorial News

மதுக்கடைகள் இருக்கும் இடங்களில் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் : கமல்ஹாசன்

டாஸ்மாக் கடைகள் இருக்குமிடங்களில் மறுவாழ்வு மையங்கள் உடனே அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“பட்டப்பகலில் குடித்துவிட்டு பொது இடங்களில் தகராறில் ஈடுபட்ட ஒரு குடிநோயாளியால் கடமை தவறாத காவல் உதவி ஆய்வாளர் பாலு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடிநோயாளியினால் குடும்பத்தில் ஏற்படும் துன்பம் தாங்காமல் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.
குடிமைப்பணி அதிகாரிகளை பொறுப்பில் அமர்த்தி ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்து லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை பட்டப்பகலிலேயே குடிக்கும் குடிநோயாளிகளாக மாற்றி இருக்கிறது இந்த அரசு.

சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல. அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விற்பனை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டிய ஒன்று.

குடியிலிருந்து மீள நினைக்கும் குடி நோயாளிகளுக்கு தரமான இலவச மறுவாழ்வு மையங்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட வேண்டும். எங்கெல்லாம் மதுக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Vishnu Vishal and Jwala Gutta are engaged

Penbugs

சென்னையில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

Kesavan Madumathy

Demi Lovato says they are non-binary

Penbugs

Hyderabad: Women complains of sexual exploitation by 139 people

Penbugs

Rape-accused Godman Nithyananda announces visa, flight to Kailasa

Penbugs

தேர்வின்றி ஆல் பாஸ் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

IPL player reports corruption approach, Board begin investigation

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

Dentist who performed tooth extraction while riding hoverboard arrested

Penbugs

Caught on camera: Men saves newly born from heavy rain flood

Penbugs

In Pictures: Bayern Munich wins champions league title

Penbugs

அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

Penbugs

Leave a Comment