Editorial News

மதுக்கடைகள் இருக்கும் இடங்களில் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் : கமல்ஹாசன்

டாஸ்மாக் கடைகள் இருக்குமிடங்களில் மறுவாழ்வு மையங்கள் உடனே அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“பட்டப்பகலில் குடித்துவிட்டு பொது இடங்களில் தகராறில் ஈடுபட்ட ஒரு குடிநோயாளியால் கடமை தவறாத காவல் உதவி ஆய்வாளர் பாலு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடிநோயாளியினால் குடும்பத்தில் ஏற்படும் துன்பம் தாங்காமல் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.
குடிமைப்பணி அதிகாரிகளை பொறுப்பில் அமர்த்தி ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்து லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை பட்டப்பகலிலேயே குடிக்கும் குடிநோயாளிகளாக மாற்றி இருக்கிறது இந்த அரசு.

சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல. அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விற்பனை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டிய ஒன்று.

குடியிலிருந்து மீள நினைக்கும் குடி நோயாளிகளுக்கு தரமான இலவச மறுவாழ்வு மையங்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட வேண்டும். எங்கெல்லாம் மதுக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

World’s oldest Panda in captivity dies at age 38

Penbugs

திறக்கப்படும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடம்

Kesavan Madumathy

Groping is not sexual assault if there is no ‘skin to skin’ contact: Bombay HC

Penbugs

19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

Penbugs

பிரதமர் வருகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Penbugs

WarnerMedia to halt HBO and WB channels across South Asia

Penbugs

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

Super Smash | AA vs NK | Match 18 | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி மருத்துவ கல்லூரிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது : தமிழக அரசு

Penbugs

Deadline for Aadhar-Pan card linking extended

Penbugs

நாளை முதல் சென்னை புறநகர் ரயிலில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

Kesavan Madumathy

Leave a Comment