இந்து கூட்டு குடும்பங்களில் மகள்களுக்கும் சமமான சொத்துரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைமுறைக்கு வந்த இந்து சொத்துரிமை திருத்த சட்டம் செல்லும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டதிருத்தத்திற்கு எதிராக தாக்கலான மனுக்களை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதீபதிகள் அளித்த தீர்ப்பில், 2005 ல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து மகள்களுக்கு சொத்துரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகன்களுக்கும் மகள்களுக்கும் பெற்றோரின் சொத்தில் சரிச மான பங்கு வழங்கி சொத்துரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்ப்பை அளித்த நீதிபதி அருண் மிஸ்ரா, வாழ்நாள் முழுதும் மகள்கள் பெற்றோரின் அன்புக்குரிய மகள்களாகவே இருப்பார்கள் என கூறினார்.
இந்த தீர்ப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு…!
சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி…!
தமிழக எதிர்கட்சித் தலைவரும் , திமுகவின் தலைவருமான மு.க . ஸ்டாலின் அவர்களும் இந்த தீர்ப்பினை வரவேற்றுள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார் அதில் அவர்
பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்.
பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென 1989ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞர் – திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது!
உரிமை கொண்டவர்களாக பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு
என தனது பதிவில் தெரிவித்துள்ளார் .