Editorial News

மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ஏழரை சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், இடஒதுக்கீட்டுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் குறைந்த அளவிலேயே வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைப்படி, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்து.

இதன் மூலம், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவ படிப்பில் சேர முடியும். ஆனால், மசோதாவுக்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், விரைவில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற இருப்பதால், 162 வது சட்டப்பிரிவின் கீழ் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதியே அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

Indonesia flight carrying 50+ passengers loses contact shortly after takeoff

Penbugs

Rape-accused Godman Nithyananda announces visa, flight to Kailasa

Penbugs

Donald Trump calls India’s air quality as filthy

Penbugs

Thai MP caught watching porn on phone during budget meeting

Penbugs

தைப்பூசத் திருவிழாவிற்கு இனி பொதுவிடுமுறை- முதல்வர் எடப்பாடி

Penbugs

Pakistan Police blames woman for gang rape, faces backlash

Penbugs

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் அனைவரும் விடுவிப்பு

Penbugs

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கேப்டன் விஜயகாந்த் போட்டியிடவில்லை

Kesavan Madumathy

1st look of Nithya Menen in Gamanam

Penbugs

Sourav Ganguly admitted to hospital

Penbugs

Injections Prices Cut: Remdesivir now at Rs 899

Penbugs

பீடி ,சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை

Penbugs

Leave a Comment