முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தாயாரின் மறைவுக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் உரையாடிய மு.க.ஸ்டாலின், அவரது தாயார் மறைவு குறித்து விசாரித்தார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று அவரது தாயார் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.