மும்பையில் மாநகராட்சி சார்பில் ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் கொரோனா சோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த 171 பேருக்கு சளி மாதிரி எடுத்துச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என மொத்தம் 53 பேருக்குக் கொரோனா வைரஸ் இருப்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதையடுத்துப் பாதிக்கப்பட்ட 53 பேரையும் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அதன்பின் கொரோனா தனிமை வார்டுகளுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தோரைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Toxic environment: The Ellen Show is under investigation