டெல்லியைப் போல மேலும் 5 மாநிலங்களும் மே மூன்றாம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் மே 16ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க டெல்லி மாநில அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இதேபோல் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மே மூன்றாம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.
குஜராத், ஆந்திரம், தமிழகம், அரியானா, இமாச்சலம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளன.
அசாம், கேரளம், பீகார் மாநிலங்கள் பிரதமருடனான கலந்துரையாடலுக்குப் பின் முடிவெடுப்பதாக அறிவித்துள்ளன.