Editorial News

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், காவலர் முருகனின் ஜாமீன் மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமை காவலர் முருகன் ஜாமீன் கேட்டு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி தாண்டவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

காவலர் முருகன் மற்றும் சி.பி.ஐ தரப்பில் வழக்கறிஞர்கள் காணொலிக் காட்சி வாயிலாக வாதிட்டனர். வழக்கு தொடக்க நிலை விசாரணையில் இருப்பதாலும், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாலும் காவலர் முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சி.பி.ஐ தரப்பு வாதிட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனிடையே, சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், முதுகு வலி காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

Protest breaks in Minneapolis streets after George Floyd dies following police encounter

Penbugs

National shutdown: CM Edappadi speech excerpts

Penbugs

Coronavirus scare: Indian Railways hikes platform ticket price from Rs 10 to Rs 50

Penbugs

Woman drives herself to the destination as Uber driver falls asleep

Penbugs

ஓப்போ தொழிற்சாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா

Kesavan Madumathy

Oldman brings note, pen and peeks through classroom to learn something daily!

Penbugs

Genelia, Riteish pledges to donate their organs!

Penbugs

Jamia Millia Islamia Protests: In Pictures

Penbugs

ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கலாம்

Kesavan Madumathy

New era: Sudan criminalises female genital mutilation

Penbugs

ஊரடங்கு நேரத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போர் அதிகரிப்பு: கூடுதல் டிஜிபி ரவி எச்சரிக்கை

Penbugs

Leave a Comment