Coronavirus

செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. சாதராண மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், சமீப காலமாக அரசியலில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் பரவி வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ பழனி கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரவியது.

இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திமுகவில் மற்றொரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவால் இறந்தவர்களுக்கு மக்கள் உரிய மரியாதை வழங்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

Kesavan Madumathy

ஐ.டி நிறுவனங்கள் 10 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

Penbugs

தமிழகத்தில் இன்று 5718 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

COVID19: Mom drives 1400km on scooty to bring her stranded son home

Penbugs

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Prithviraj Sukumaran tested positive for coronavirus

Penbugs

தமிழகத்தில் இன்று 28,745 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 6047 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

“கொரோனாவை கட்டுப்படுத்தும் கால அளவு இறைவனுக்குத்தான் தெரியும்!” – முதல்வர் பழனிசாமி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா

Penbugs