என்னை போலவே இந்த Picture
பார்த்தோன எமோஷனல் ஆன
நிறைய பேர் இங்க இருக்காங்க,
அவங்ககிட்ட கேட்டா சொல்லுவாங்க
அப்பா இல்லாத வலி எப்படி இருக்கும்ன்னு,
குடும்பத்தின் தலைமை ஆசிரியர்
அப்பா என்பவர்,அவரை அக்குடும்பம்
இழந்து விட்டால் இந்த சமூகத்தில்
அவர்கள் சந்திக்கும் இடர்களுக்கு
மனதில் ஏற்படும் வலி ஒன்று தான்
காயம் நிறைந்த பரிசு,
அப்பாவின் ஆட்டோ ரிக்ஷாவில்
ஒவ்வொரு நாளும் தன்னை சுமந்து
சென்றது மட்டுமல்லாமல் இன்று இந்த
நிலைமையில் ஊர் கூடி போற்றும் அழகை
பார்த்து பூரிச்சு போக தன் அப்பா இல்லை
என்ற வலி தான் சிராஜ்ஜிற்கு இப்போது
அதிகமாக இருக்கும்,
அப்பாவின் இறப்பில் பங்கேற்க
முடியாமல் போனது, கடைசியாக
அவர் முகத்தை பார்க்கும் பலன் கிடைக்காமல் போனது என்று
சிராஜின் துயர் நிறைந்த நாட்களில்
இன்றைய நாள் பெரிய உத்வேகம்
அவர் அப்பாவின் ஆசியுடன்,
நிறவெறி,கேளி,கிண்டல் என
எத்தனை வாய் இகழ்ந்து தள்ளினாலும்
தன் நிலையில் சரியாக இருப்பவனின்
நிழலை கூட யாரும் அசைத்து பார்க்க
முடியாது,
அப்பா இல்லாத வலிய
அனுபவிச்சவங்களுக்கு சிராஜின்
வெற்றி ஒரு பெரிய பாசிட்டிவிட்டி,
வாழ்த்துக்கள் சிராஜ்
ஆயிரம் முத்தங்கள் பரிசாக!
Picture Courtesy : Sports Parody