Editorial News

கலைஞர் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி திட்டம் – புரட்சி முதல்வர் நாராயணசாமி என ஸ்டாலின் புகழாரம்

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தது .

அதன்படி நேற்று புதுச்சேரி மாநில சட்டப்பேரவை நடந்தது.

அப்போது பல திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி அரசு பள்ளிகளில் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி திட்டம் நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும்; அந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு இட்லி, பொங்கல், கிச்சடி வழங்கப்படும் என்றும் கூறினார்.

இந்த நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் சிற்றுண்டி திட்டத்தை அறிவித்தது பெருமை அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் “கலைத் தொண்டு மூலமாக ‘கலைஞர் கழகம்’ வளர்த்த புதுவையில் ‘புரட்சி முதல்வர்’ திரு. நாராயணசாமி அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரால் பள்ளி மாணவர்க்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது பெருமகிழ்ச்சிக்குரியது. திமுக-வினர் மனதில் இடம்பெற்றுவிட்ட அவரது புகழ் வாழ்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

Penbugs

Breaking: Lin Dan announces retirement

Penbugs

Battle for Tamil will be bigger than Jallikattu: Kamal Haasan

Penbugs

Oldman brings note, pen and peeks through classroom to learn something daily!

Penbugs

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: அமர்நாத் யாத்திரை 2020 ரத்து…!

Penbugs

ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.7,500; மத்திய அரசுக்கு காங்., குழு சிபாரிசு

Penbugs

Grimes Explains Meaning Behind Name Of Her And Elon Musk’s Baby X Æ A-12

Penbugs

Racism is in cricket too: Chris Gayle

Penbugs

இந்தியா குளோபல் வீக் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Penbugs

Jaipur: Mentally challenged girl raped, killed by brother, his friends

Penbugs

Leave a Comment