Coronavirus

தமிழக முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சூழலில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இந்த உரையாடலின் போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாகவும், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.

தமிழகத்திற்கு அதிகளவில் ரேபிட் கிட் டெஸ்ட் கருவியை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல் அமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று, கூடுதல் ரேபிட் கருவி வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

தமிழகத்தில் நேற்று மட்டும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3793 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னையில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம்

Kesavan Madumathy

தமிழகத்தில் மேலும் 2174 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Penbugs

COVID19: Shardul Thakur becomes 1st Indian cricketer to begin outdoor practice

Penbugs

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தவறான கணக்கை காட்டிய சீனா ; தீடிரென உயர்ந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

Penbugs

Qatar makes wearing masks outside mandatory, fine up to $50000

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5146 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Afghanistan’s teenage girls’ team is building cheap ventilators

Penbugs

Kamal Haasan collaborates with other artists for Arivum Anbum, lyrics out

Penbugs

உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு அரசு பணி

Penbugs