Coronavirus Editorial News

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

காய்கறி, மளிகை உள்பட அனைத்துக் கடைகளும் நாளை முழுவதும் அடைக்கப்பட்டிருக்கும்.

கடந்த மாதம் 19ம் தேதி தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கில் ஜூலை மாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் ஜூலை மாதம் 5,12,19, 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் இம்மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

தளர்வுகளற்ற ஊரடங்கின் போது வாகனங்களில் சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இரவு முதலே முக்கிய சாலைகள் தடுப்புகள் போடப்பட்டு மூடப்பட்டு விடும்.

திங்கட்கிழமை காலை 6 மணிக்கு இந்த ஊரடங்கு தளர்த்தப்படும்.

Related posts

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..!!

Kesavan Madumathy

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்கம்

Penbugs

COVID19: Ajith donates Rs 1.25 Crores

Penbugs

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

Hyderabad Vet murder case: All four accused shot dead

Penbugs

மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்; ஏர் இந்தியா..!

Penbugs

Spanish Princess Maria Teresa dies due to coronavirus

Penbugs

Millions sign petition to shut down PornHub for hosting rape videos

Penbugs

நாளை முதல் மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி-முதலமைச்சர்

Penbugs

இன்று தமிழகத்தில் 5768 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னையில் இன்று ஒரே நாளில் 30 பேர் கொரோனாவில் இருந்து நலமடைந்தனர் …!

Penbugs

Leave a Comment