Coronavirus Editorial News

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

காய்கறி, மளிகை உள்பட அனைத்துக் கடைகளும் நாளை முழுவதும் அடைக்கப்பட்டிருக்கும்.

கடந்த மாதம் 19ம் தேதி தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கில் ஜூலை மாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் ஜூலை மாதம் 5,12,19, 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் இம்மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

தளர்வுகளற்ற ஊரடங்கின் போது வாகனங்களில் சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இரவு முதலே முக்கிய சாலைகள் தடுப்புகள் போடப்பட்டு மூடப்பட்டு விடும்.

திங்கட்கிழமை காலை 6 மணிக்கு இந்த ஊரடங்கு தளர்த்தப்படும்.

Related posts

Gurugram: 14YO boy commits suicide after named in ‘Me Too’ post

Penbugs

தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள்

Kesavan Madumathy

கடந்த 24 மணி நேரத்தில் 4163 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்

Kesavan Madumathy

கொரோனா தொற்றில் இருந்து மத்திய அமைச்சர் அமித்ஷா குணமடைந்தார்

Penbugs

COVID19: India’s recovery rate reaches 90 per cent

Penbugs

ஐடி நிறுவனங்கள் 50 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

Penbugs

COVID-19: Milk will not be sold after 9 am in TN

Penbugs

Protest as much as you can, CAA won’t be taken back: Amit Shah at Lucknow rally

Penbugs

Salman Khan launches personal care brand FRSH, starts with sanitizer

Penbugs

மும்பையில் ஊடகத்துறையினர் 53 பேருக்குக் கொரோனா பாதிப்பு…!

Penbugs

Chinese Billionaire Jack Ma suspected missing

Penbugs

Surjith, 2YO who fell was trapped in borewell, died

Penbugs

Leave a Comment