Coronavirus Editorial News

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

காய்கறி, மளிகை உள்பட அனைத்துக் கடைகளும் நாளை முழுவதும் அடைக்கப்பட்டிருக்கும்.

கடந்த மாதம் 19ம் தேதி தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கில் ஜூலை மாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் ஜூலை மாதம் 5,12,19, 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் இம்மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

தளர்வுகளற்ற ஊரடங்கின் போது வாகனங்களில் சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இரவு முதலே முக்கிய சாலைகள் தடுப்புகள் போடப்பட்டு மூடப்பட்டு விடும்.

திங்கட்கிழமை காலை 6 மணிக்கு இந்த ஊரடங்கு தளர்த்தப்படும்.

Related posts

எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது’ மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Penbugs

‘I had a good life, keep this for the younger’: 90 YO dies after refusing ventilator

Penbugs

Priest beheads a man in Odisha claiming to put an end to Coronavirus

Penbugs

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நல்லக்கண்ணு ஐயா..!

Kesavan Madumathy

Are newspapers dying?

Penbugs

Cannot dilute COVID protocols: Central asks TN Govt to follow 50% theatre occupancy

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று 4,743 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்; பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

Penbugs

இந்தியாவில் மக்கள் வாழ சிறந்த நகரங்களில் நான்காவது இடம் பிடித்த சென்னை ..!

Kesavan Madumathy

Avoiding public gatherings matters most: Dr Madan Gunasekaran on Corona outbreak

Penbugs

Breaking: Basketball legend Kobe Bryant dies in helicopter crash

Penbugs

Let’s CELEBRATE RESPONSIBLY!

Penbugs

Leave a Comment