Coronavirus

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது. வீட்டுக்கண்காணிப்பில் 21,381 பேர் உள்ளனர். அரசுக்கண்காணிப்பில் 20 பேர் உள்ளனர். கண்காணிப்பு முடிந்தவர்கள் எண்ணிக்கை 85,253 ஆகும்.

மாவட்ட வாரியாக சென்னையில் அதிகபட்சமாக ஒரு நாளில் மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்தம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 ஆக உள்ளது. கோவையில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவையில் மொத்தம் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. திண்டுக்கலில் 5 பேருக்கும், நெல்லையில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,037 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Seven more Pakistan cricketers tested positive for COVID19

Penbugs

Usain Bolt tested positive for coronavirus

Penbugs

பெங்களூர் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

Penbugs

தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Penbugs

Greta Thunberg supports the demand to postponed NEET, JEE during COVID19

Penbugs

COVID19: 84 people working at Raj Bhavan tested positive

Penbugs

Akshay Kumar donates Rs 25 Crore to PM relief fund

Penbugs

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை

Kesavan Madumathy

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளுடன் பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

Penbugs

பீக் ஹவர்ஸை தவிர மற்ற நேரங்களில் பயணிகள் செல்ல அனுமதி

Kesavan Madumathy

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சீனா அறிவிப்பு…!

Kesavan Madumathy