Coronavirus

தனியார் கல்லூரிகள் மூன்று தவணைகளாகக் கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடிவு-தமிழக அரசு

தனியார் கல்லூரிகள் மூன்று தவணைகளாகக் கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளி கல்லூரிகளில் கல்விக் கட்டணம் பெறக் கூடாது எனக் கூறித் தமிழக அரசு ஏப்ரல் 20ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை ரத்து செய்யக் கோரித் தனியார் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவணை முறையில் கட்டணம் பெறுவது தொடர்பாக அரசுக்குக் கோரிக்கை மனு அனுப்ப மனுதாரர் சங்கத்துக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில் தமிழக உயர் கல்வித் துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தனியார் கல்லூரிகள் சங்கத்தின் மனுவைப் பரிசீலித்த அரசு, ஆகஸ்டு, டிசம்பர், ஏப்ரல் மாதங்களில் மூன்று தவணைகளாகக் கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கொரோனாவை வென்றவர்கள்.. தெலங்கானாவில் 44 நாள் குழந்தை, திண்டுக்கல்லில் 95 வயது மூதாட்டி

Penbugs

அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

Penbugs

Payment of wages during lockdown not mandatory: Government withdraws clause

Penbugs

Corona updates: TN crosses 24000, 1091 cases today

Penbugs

COVID19: 70YO Man beats COVID19 in 62 days, gets $1.1 Million hospital bill

Penbugs

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5667 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 7758 பேர் இன்று டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

இன்று ஒரே நாளில் 6020 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பு மையம் துவங்க சென்னை மாநகராட்சி அனுமதி

Penbugs

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா

Penbugs

COVID19: Aishwarya Rai Bachchan and Aaradhya also tested positive

Penbugs

Leave a Comment