Coronavirus

தனியார் கல்லூரிகள் மூன்று தவணைகளாகக் கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடிவு-தமிழக அரசு

தனியார் கல்லூரிகள் மூன்று தவணைகளாகக் கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளி கல்லூரிகளில் கல்விக் கட்டணம் பெறக் கூடாது எனக் கூறித் தமிழக அரசு ஏப்ரல் 20ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை ரத்து செய்யக் கோரித் தனியார் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவணை முறையில் கட்டணம் பெறுவது தொடர்பாக அரசுக்குக் கோரிக்கை மனு அனுப்ப மனுதாரர் சங்கத்துக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில் தமிழக உயர் கல்வித் துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தனியார் கல்லூரிகள் சங்கத்தின் மனுவைப் பரிசீலித்த அரசு, ஆகஸ்டு, டிசம்பர், ஏப்ரல் மாதங்களில் மூன்று தவணைகளாகக் கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஐ.டி நிறுவனங்கள் 10 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

Penbugs

தமிழகத்தில் இன்று 5524 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19 & Floods: Assam’s situation needs attention

Penbugs

Chile: Police trains Sniffer dogs to detect COVID19 in early stages

Penbugs

தமிழகத்தில் இன்று 5572 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: 15YO girl cycles 1200km to bring ailing father home

Penbugs

இரண்டு‌ அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா

Penbugs

Anrich Nortje tested positive for COVID19

Penbugs

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Kesavan Madumathy

பதிவுத்துறை அலுவலகங்கள் 20ம் தேதி முதல் செயல்படும்: ஐஜி ஜோதி நிர்மலாசாமி அறிவிப்பு

Penbugs

Kamal Haasan collaborates with other artists for Arivum Anbum, lyrics out

Penbugs

Leave a Comment