Coronavirus

தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா தொற்று இல்லா கேரளம்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவில் முதன் முதலில் கொரோனா தொற்று பதிவான கேரளாவில், கொரோனா பாதிப்பு கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்க எண்கள் அல்லது அதற்கு சற்றும் கூடுதலான எண்ணிக்கையிலேயே இருந்தது. நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.

இந்த நிலையில், 2-வது நாளாக கேரளாவில் நேற்றும் புதிதாக கொரோனா நோய்த்தொற்று யாருக்கும் பதிவாகவில்லை. ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்ட 34 -பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒருநாளில் மட்டும் 61 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 462 பேர் குணமடைந்துள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நன்று, பரவும் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. 61 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 34 பேர் மருத்துவனையில் உள்ளனர். புதிதாக ஹாட்ஸ்பாட்ஸ் ஏதும் இல்லை. 21,724 பேர் கண்காணிப்பில் உள்ளனர்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

வீட்டிலேயே தனிமைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல் முறைகளை வெளியிட்டது தமிழக அரசு…!

Kesavan Madumathy

New ‘swine flu’ virus with pandemic potential identified in China

Penbugs

தமிழகத்தில் இன்று 5525 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

We’ll just have to wait and watch: Sania Mirza on return of Tennis

Penbugs

COVID19: Karan Johar to self isolate after 2 staffs tested positive

Penbugs

COVID19: TN crosses 21000 mark, 938 cases today

Penbugs

கொரோனாவில் இருந்து குணமடைவது 70 சதவீதமாக உயர்வு

Penbugs

COVID19 in TN: 509 positive cases

Penbugs

தமிழகத்தில் மதுபான விலை ரூ.20 வரை உயர்வு – டாஸ்மாக் அறிவிப்பு

Kesavan Madumathy

கொரோனா சிகிச்சை அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விவேக்

Penbugs

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Kesavan Madumathy

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் தளர்வற்ற முழு ஊரடங்கு

Penbugs