உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி டெண்டர் மூலம் தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி போதுமானதாக இல்லாததால், தடுப்பூசி இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மத்திய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசி 18 முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு போடுவதற்கு போதுமானதாக இல்லை.
தமிழகத்திற்கு மத்திய அரசு உயர்த்தி வழங்கிய ஆக்ஸிஜன் அளவும் போதுமானதாக இல்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனால் உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்து 18முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Jofra Archer talks about unfair criticism and racist replies during lockdown