Editorial News

வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடலை கண்ணீருடன் தோளில் சுமந்து சென்று சத்தீஸ்கர் முதல்வர் …!

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்தினருடன் நடந்த மோதலில்ல் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரரின் உடலை தனது தோளில் கண்ணீருடன் சுமந்து சென்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் அஞ்சலி செலுத்தி நெகிழ வைத்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் ராம் குஞ்சம் என்ற ராணுவ வீரர் சீன தாக்குதலி்ல் வீரமரணம் அடைந்தார். கான்கேர் மாவட்டம், கிதாலி குருதோலா கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் ராம், கடந்த 10 ஆண்டுகளுக்குமேலாக ராணுவத்தில் இருந்து வந்தார். இந்த தாக்குதலில் கணேஷ் ராம் வீரமரணம அடைந்ததையடுத்து, அவரின் உடல் விமானம் மூலம் ராய்ப்பூர் நகருக்கு நேற்று வந்தது.

வீமரணம் அடைந்த கணேஷ் ராம் உடலுக்கு மரியாதை செலுத்த விமான நிலையத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் காத்திருந்தார். விமானத்தில் இருந்து கணேஷ் ராம் உடல் இறக்கப்பட்ட உடன், தான் மாநில முதல்வர் என்றும் பாராமல், ராணுவ அதிகாரியை விலக்கிவிட்டு, முதல்வர் பூபேஷ் பாகல் கணேஷ் ராம் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை தனது தோளில் சுமந்து சென்றார். இந்த காட்சியைப் பார்த்த மற்ற அதிகாரிகள் நெகிழ்ந்து போயினர்.

அதன்பின் விமான நிலையத்தில் கணேஷ் ராம் உடலுக்கு மலர்வளையம் வைத்து, முதல்வர் பூபேஷ் பாகல் மரியாதை செலுத்தினார். அதன்பின் தனி ஹெலிகாப்டர் மூலம் கணேஷ் ராமின் சொந்த கிராமத்துக்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கணேஷ் ராம் வீரமரணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் பூபேஷ் பாகல், “ கணேஷ் ராம் நினைவாக, கிதாலியில் உள்ள பள்ளிக்கு அவரின் பெயர் சூட்டப்படும். கணேஷ் ராம் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பி்ல நிவாரணமாக ரூ.20 லட்சமும், வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்கப்படும்” என அறிவித்தார்

Related posts

PM Modi quotes ‘Faking News’ at Parliament to attack Omar Abdullah

Penbugs

சென்னையில் முதல் கட்டமாக அத்தியாவசிய பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனை அறிமுகம்…!

Kesavan Madumathy

Power couple Sue Bird and Megan Rapinoe are engaged

Penbugs

Javed Akhtar becomes 1st Indian to win Richard Dawkins award

Penbugs

Hotel Saravana Bhavan owner Rajagopal sentenced for life!

Penbugs

Surjith, 2YO who fell was trapped in borewell, died

Penbugs

Parle-G registers record sales in eight decades amidst lockdown

Penbugs

என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

Penbugs

திருக்குறளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

Penbugs

Hyderabad: Child rights activist Achyuta Rao dies due to COVID19

Penbugs

From being abandoned to anxiety, Sid Mallya’s new series on mental health

Penbugs

Tamil Nadu stops issuing EWS certificates

Penbugs