Coronavirus

தந்தை உடல் தகனம்: வீட்டிலிருந்தே இறுதி மரியாதை செலுத்திய யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் தந்தையும், சமூக சேவகருமான ஆனந்த் சிங் பிஷ்த்தின் உடல் உத்தரகண்ட் மாநிலம், பௌரி கா்வால் மாவட்டம் புல்சட்டியில் உள்ள கங்கைக் கரையில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்த முதல்வா் யோகி ஆதித்யநாத், லக்னௌவில் உள்ள தனது இல்லத்தில் இரண்டு நிமிட மௌனம் அனுசரித்து இறுதி அஞ்சலி செலுத்தினாா். அவருடன், அரசு அதிகாரிகள் சிலரும் அஞ்சலி செலுத்தினா்.

மேலும், முதல்வா் ஆதித்யநாத் தலைமை துறவியாக இருக்கும் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலில், பணிபுரிந்து வரும் ஊழியா்களும், பணியாளா்களும் இறுதி மரியாதை செலுத்தினா்.

முன்னதாக ஆதித்யநாத்தின் தந்தை தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானாா். அவருக்கு வயது 89.

இந்த தகவலைத் தெரிவிக்கும்போது முதல்வா் ஆதித்யநாத் தனது லக்னௌ வீட்டில் அதிகாரிகளுடன் கரோனா நெருக்கடி குறித்த ஆய்வுக்கூட்டத்தில் இருந்தாா். தந்தை இறந்த தகவல் அறிந்த பிறகும் அதிகாரிகளுடன் கூட்டத்தை தொடா்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னா், ஊரடங்கு காரணமாக தனது மாநிலத்திலேயே இருக்க கடமைப்பட்டிருப்பதாகவும், தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து உத்தரகண்ட் மாநிலம் புல்சட்டியில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் ஆனந்த் சிங் பிஷ்தின் மூத்த மகன் மன்வேந்திர சிங் பிஷ்த் அவரது உடலுக்கு தீ மூட்டினாா்.

இறுதிச் சடங்கில் உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத், உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தலைவா் பிரேம்சந்த் அகா்வால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related posts

103-year-old woman celebrates with beer after beating COVID-19

Penbugs

“All-Pet” Private Jet to carry stranded pets from Delhi to Mumbai

Penbugs

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவோர் விகிதம் 77.77 சதவீதம் – மத்திய சுகாதாரத் துறை

Penbugs

தாம்பரத்தில் 500 படுக்கை வசதிகளுடன் கரோனா வகைப்படுத்துதல் மையம் திறப்பு

Penbugs

TN recruits 530 doctors, to deploy 200 ambulances

Penbugs

அரசு பலமுறை எச்சரித்ததும் கோயம்பேடு வியாபாரிகள் கேட்கவில்லை ; முதல்வர் விளக்கம்…!

Kesavan Madumathy

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

Kesavan Madumathy

நேரடி‌ வகுப்புகள் கல்லூரிகளில் ரத்து: தமிழக அரசு

Penbugs

சென்னையில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம்

Kesavan Madumathy

COVID19 updates: Tamil Nadu crosses 23,000, 1162 new cases today

Penbugs

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்: 5 ஆவது இடத்தில் இந்தியா !

Kesavan Madumathy

Telangana CM KCR Recommends Extension Of Lockdown By Two Weeks

Penbugs