இந்திய ரயில்வே தொடங்கப்பட்ட 167 ஆண்டுகளில் முதல் முறையாக தனது பிறந்த நாளன்று, எந்தவிதமான பயணிகளையும் ஏற்றிக்கொண்டு செல்லாமல் ரயில்கள் முதல் முறையாக நேற்று ஓய்வெடுத்தன.
சரக்கு ரயில்கள் வழக்கம் போல் இயங்கினாலும் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலத்தில் முதன்முதலாக பயணிகள் ரயில் இயக்கப்பட்ட நாள் நேற்றுதான். கடந்த 1853-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி மாலை சரியாக 3.35 மணிக்கு மும்பையின் போரி பந்தர் ரயில் நிலையத்திலிருந்து தானேவுக்கு முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
மும்பையில் பிரதான ரயில் நிலையமான சிஎஸ்டி ரயில் நிலையத்தின் முந்தைய பெயர்தான் போரி பந்தர் ரயில் நிலையம்.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்துப் பயணிகள் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.