Coronavirus

திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று ஆய்வு!

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அமைக்கப்படும் காய்கறி சந்தையினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆய்வு செய்கின்றனர்.

கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவியதை அடுத்து, திருமழிசையில் 200 கடைகளுடன் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து, இன்று நள்ளிரவு முதல் சந்தை செயல்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நேரில் பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மாலை திருமழிசைக்கு செல்கின்றனர்.இதனிடையே, கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டதன் எதிரொலியாக, சென்னையில் கடந்த 2 நாட்களாக சில்லறை விற்பனையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Picture Courtesy: The Hindu.

Related posts

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

Penbugs

தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா..!

Kesavan Madumathy

இ – பாஸ் நடைமுறை குறித்து அரசின் முக்கிய அறிவிப்பு

Penbugs

Still no clarity on our next series: Poonam Yadav

Penbugs

Kanpur man returns home 2 days after being buried by family

Penbugs

Actor Danny Masterson charged with rapes of three women

Penbugs

TN government announce relaxation measures for industries in non-containment zones

Penbugs

Pregnancy kit, condoms, hand wash: Here is what India ordering on Dunzo

Penbugs

கொரோனாவில் இருந்து குணமடைவது 70 சதவீதமாக உயர்வு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2579 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

மதுரையில் ஊரடங்கு புதன்கிழமை அதிகாலை முதல் அமல்!

Kesavan Madumathy

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 796 பேர் இடமாற்றம்

Penbugs