5-ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு
வழிபாட்டுத் தலங்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீட்டிப்பு
நீலகிரி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை
மெட்ரோ ரயில், மின்சார ரயில்களுக்கான தடை நீட்டிக்கப்படுகிறது
மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு
தியேட்டர், உடற்பயிற்சி கூடங்கள், மதுபான விடுதிகளுக்கு தடை நீட்டிப்பு
ஜூன் 1 முதல் பொதுப் போக்குவரத்து 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அனுமதி
சென்னை தவிர்த்து இதர மண்டலங்களில் 50% பேருந்துகள் இயக்கப்படும்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தடை நீட்டிப்பு
அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதி
பேருந்துகளில் 60% இருக்கைகளில் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி
பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க இ பாஸ் அவசியமில்லை
மண்டலங்கள், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தடை தொடர்கிறது
வெளிமாநிலங்கள், வெளி மண்டலங்களுக்கு சென்று வர இ பாஸ் முறை தொடர்ந்து நடைமுறை
வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து பெரிய நகை, ஜவுளி கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்