Coronavirus

மே 3ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும்

21 நாள் ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில் பிரதமர் உரை

கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது

ஊரடங்கால் சிலருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான்

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை சிறப்பான பாதையில் செல்கிறது

ஊரடங்கால் சிலர் தங்கள் குடும்பத்தை பிரிந்து இருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது

பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு நாட்டை மக்கள் அனைவரும் காத்து வருகின்றனர்

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் அனைவரும் படை வீரர்கள் போல் செயல்படுகின்றனர்

ஊரடங்கை சிறப்பாக பின்பற்றி கொரோனா பரவலை மக்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் கட்டுப்படுத்தியுள்ளனர்

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்

கொரோனாவால் ஏற்பட இருந்த பாதிப்பை இந்தியா வெற்றிகரமாக தவிர்த்துள்ளது

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்தவர்களை விமான நிலையங்களில் முன்கூட்டியே பரிசோதனைக்கு உட்படுத்தினோம்

இந்தியாவில் முதல் கொரோனா உறுதிப்படுத்தும் முன்பே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை யாரும் மறுக்க முடியாது

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பல்வேறு நாடுகளை விட இந்தியாவின் செயல்பாடு சிறப்பானது

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவின் செயல்பாட்டை உலகமே பாராட்டுகிறது

சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது

மற்ற எதையும் விட இந்திய மக்களின் உயிர் முக்கியமானது என்கிற அடிப்படையில் அரசு செயல்படுகிறது

கொரோனாவுக்கு எதிராக மாநில அரசுகள் பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றன

கொரோனா ஊரடங்கு சமயத்தில் மாநில அரசுகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தன

மத்திய அரசும், சுகாதாரத்துறை நிபுணர்களும் தற்போதும் உஷார் நிலையில் இருக்கின்றன

ஊரடங்கை நீட்டிப்பது என்று பல்வேறு மாநிலங்கள் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டன

மே3ந் தேதி வரை ஊரடங்கு

மே 3ந் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது

மே 3ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும்

மேலும் 18நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிப்பு

மே 3ந் தேதி ஊரடங்கு முடிவடையும் வரை மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அடுத்த 1 வாரம் மிகவும் முக்கியமானது

கொரோனாவுக்கு எதிரான போரில் ஊரடங்கு எனும் கவசத்தை தற்போது நாம் துறக்க முடியாது

ஏப்ரல் 20ந் தேதி முதல் அத்தியாவசிய பணிகள் சிலவற்றுக்கு விலக்குகள் வழங்கப்படும்

ஏப்ரல் 20 முதல் விலக்கு அளிக்கப்படும் பணிகள் குறித்து நாளை அறிவிக்கை வெளியிடப்படும்

ஏப்ரல் 20முதல் ஊரடங்கின் நிலை படிப்படியாக ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்

ஏப்ரல் 20ந் தேதி வரை ஊரடங்கை முழு மூச்சாக மக்கள் கடைபிடிக்க வேண்டும்

ஏப்ரல் 20ந் தேதி சில பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டாலும் நிபந்தனைகள் தொடரும்

ஏப்ரல் 20ந் தேதி முதல் சில விதிவிலக்குகள் அளிக்கப்படும், அப்போது நிபந்தனைகள் மீறப்பட்டால் விதி விலக்கு வாபஸ் பெறப்படும்

ஊரடங்கு சமயத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய ஏழு வழிமுறைகளை வெளியிட்டார் மோடி

வீட்டை விட்டு வெளியே வரும் போது மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில விதிவிலக்குகள் வழங்கப்படும்

வயதில் மூத்தவர்களை அதிக கவனத்துடன் மக்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்

சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் செயல்பட வேண்டும்

ஆரோக்கிய சேது செயலியை மக்கள் அனைவரும் டவுன்லோடு செய்ய வேண்டும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

Related posts

Kerala: 110YO woman recovers from coronavirus

Penbugs

COVID19: Man rescued by Sonu Sood, names his shop after him

Penbugs

தமிழகத்தில் இன்று 6599 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Sanjay Dutt in hospital after complaining of breathlessness

Penbugs

Man spends Rs 1 crore to buy ration kits for poor

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,037 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

ஏஐசிடிஇயின் பெயரில் போலி மின்னஞ்சல் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு

Penbugs

டாக்டர்களுக்கு சல்யூட் – சிவகார்த்திகேயன்!

Penbugs

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Kesavan Madumathy

Chinese virologist claims COVID-19 was made in Wuhan lab

Penbugs

மராட்டியத்தில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Penbugs

Air India Express: One of deceased passengers tested COVID19 positive

Penbugs