அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது எனவும் ,
உத்தரவை மீறினால் அண்ணா பல்கலை.யின் அங்கீகாரம் பறிக்கப்படும் எனவும் ஏ.ஐ.சி.டி.இ மின்னஞ்சல் அனுப்பியதாக சமூக வலைத்தளங்களிலும் , தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியானது
தற்போது ஏ.ஐ.சி.டி.இ. அனுப்பியதாக ஊடகங்களில் வெளியான மின்னஞ்சல் போலியானது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில் எனது தரப்பில் இருந்து எந்த மின்னஞ்சலையும் வெளியிடவில்லை என்றும் சமூக வலைதளங்களிலும் , சில தொலைக்காட்சி செய்திகளில் வந்த மின்னஞ்சல் மாதிரி போலியானது எனவும் தெரிவித்துள்ளார்.