Coronavirus

மராட்டியத்தில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த வைரஸ் தொற்றுக்கு 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,393 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 388 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 4,258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் தான் நாட்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,652 ஆக இருந்தது.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,427 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இன்று மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்.. மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள்..!

Kesavan Madumathy

Lockdown till July 31: Government announces guidelines

Penbugs

Bengaluru: 103 test COVID19 positive after a party

Penbugs

COVID19: Afghanistan’s teenage girls’ team is building cheap ventilators

Penbugs

Former President Pranab Mukherjee on ventilator support, remains critical

Penbugs

நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து

Kesavan Madumathy

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 796 பேர் இடமாற்றம்

Penbugs

நயன்தாராவுக்கு கொரோனா என வதந்தி, விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

Kesavan Madumathy

COVID19: Punjab becomes 2nd state to extend Coronavirus lockdown

Penbugs

தமிழகத்தில் நாளை முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

Jodhpur cop kneels on man’s neck for not wearing mask

Penbugs

India invites developers to create Zoom alternative; 1 Crore prize money

Penbugs