Coronavirus

மராட்டியத்தில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த வைரஸ் தொற்றுக்கு 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,393 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 388 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 4,258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் தான் நாட்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,652 ஆக இருந்தது.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,427 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இன்று மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

Penbugs

I was pretty scared, much better than expected: Virat Kohli on 1st net session in Dubai

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,049 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழக பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு ; நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

Kesavan Madumathy

England set to postponed India tour: Reports

Penbugs

Salman Khan launches personal care brand FRSH, starts with sanitizer

Penbugs

Varalaxmi Sarathkumar distributes food to 1600 migrant workers

Penbugs

COVID19: Djokovic, Federer, Nadal draws out plans to help lower ranked players

Penbugs

Corona Virus Detailed Stats

Penbugs

மோடி நல்லவா் என்று கூறினால் ரேஷன் பொருள் கிடையாது: காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் சா்ச்சை

Penbugs

ஏஐசிடிஇயின் பெயரில் போலி மின்னஞ்சல் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,141 பேர் பாதிப்பு …!

Kesavan Madumathy