Coronavirus

மராட்டியத்தில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த வைரஸ் தொற்றுக்கு 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,393 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 388 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 4,258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் தான் நாட்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,652 ஆக இருந்தது.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,427 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இன்று மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

COVID19: Karnataka students climb hill for internet for online classes

Penbugs

Ponmagal Vandhal: Exhibitors warns Suriya after he opts for OTT release

Penbugs

சிஏபிஎஃப் கேன்டீன்களில் உள்நாட்டு தயாரிப்புகள் மட்டுமே விற்பனை – அமித் ஷா அறிவிப்பு

Penbugs

COVID 19 Nasal Swab Test punctures women’s brain lining

Penbugs

COVID HEROES: Kohli to honor Simranjeet Singh

Penbugs

கொரோனா நோயாளிகள் இல்லாத மாநிலம் ஆனது கோவா..!

Penbugs

இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்

Kesavan Madumathy

Coronavirus in TN: 58 new cases, total number goes to 969

Penbugs

Jofra Archer fined for breaching bio-secure protocols

Gomesh Shanmugavelayutham

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6384 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

காஞ்சிபுரத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா!

Penbugs

COVID19: Kurnool pays adieu to 2 Rs doctor Ismail

Penbugs