Coronavirus

கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்வதையடுத்து புதிதாக 26 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளில் மஹா., முன்னிலையில் உள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. கொரோனா பாதிப்புகள் குறித்து நேற்று (மே.,14) கேரள முதல்வர் பினராயி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், மாநிலத்தில் மேலும் 26 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.இதையொட்டி சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 64 ஆக இருந்தது.

மாநிலத்தில் புதிதாக நோய் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் , மற்ற 7 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். கொரோனா பாதிப்பு தொடர்பாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், படாவிட்டாலும் நோயின் தீவிரத்தை அறிந்து மக்கள் செயல்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ள வேண்டியநிலையில் உள்ளோம். மக்களும் மாஸ்க், சமூக இடைவெளி, கிருமிநாசினி மற்றும் கைகளை கழுவுதல் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
இதுவரை கேரளாவில் மொத்தம் 560 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 64 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 36,362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். 548 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ளனர். மாநிலத்தில் 15 ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

Allu Arjun tests positive for coronavirus

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3095 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Penbugs

பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டது ரஷ்யாவின் ஸ்புட்னிக் -V தடுப்பூசி

Penbugs

தமிழகத்தில் இன்று 3859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Corona outbreak: Phoenix mall employee tested positive

Penbugs

பெங்களூர் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 2532 பேர் பாதிப்பு …!

Kesavan Madumathy

செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு

Penbugs

மேற்கு வங்கத்தில் ஜூலை மாதம் 31 தேதி வரை பொது முடக்கம்

Penbugs

நாளை முதல் மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி-முதலமைச்சர்

Penbugs

85YO cancer patient, wife recovers from COVID19

Penbugs