Coronavirus

கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்வதையடுத்து புதிதாக 26 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளில் மஹா., முன்னிலையில் உள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. கொரோனா பாதிப்புகள் குறித்து நேற்று (மே.,14) கேரள முதல்வர் பினராயி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், மாநிலத்தில் மேலும் 26 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.இதையொட்டி சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 64 ஆக இருந்தது.

மாநிலத்தில் புதிதாக நோய் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் , மற்ற 7 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். கொரோனா பாதிப்பு தொடர்பாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், படாவிட்டாலும் நோயின் தீவிரத்தை அறிந்து மக்கள் செயல்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ள வேண்டியநிலையில் உள்ளோம். மக்களும் மாஸ்க், சமூக இடைவெளி, கிருமிநாசினி மற்றும் கைகளை கழுவுதல் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
இதுவரை கேரளாவில் மொத்தம் 560 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 64 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 36,362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். 548 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ளனர். மாநிலத்தில் 15 ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

தமிழகத்தில் இன்று 5752 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

85YO cancer patient, wife recovers from COVID19

Penbugs

COVID19: New Zealand reports two new cases

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3793 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Coronavirus: Suresh Raina donates 52 Lakhs for relief fund

Penbugs

COVID19: TN to decide on lockdown extension tomorrow

Penbugs

You are letting the team down: Kohli to RCB members on breaching bio-bubble protocol

Penbugs

தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா…பாதிப்பு எண்ணிக்கை 15,000ஐ தாண்டியது

Kesavan Madumathy

Chelsea FC writes to Abhishek Bachchan over COVID19

Penbugs

Floods: Arsenal, Pietersen prays for people of Assam

Penbugs

தமிழகத்தில் இன்று 6,031 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs