Coronavirus Editorial News

ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சர்

வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தினமும் 200 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்த பின்னர் கடந்த மார்ச் மாதம் முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

வெளிமாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்பதற்காக மே ஒன்றாம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து 15 நகரங்களுக்கு கடந்த 12 ஆம் தேதி ஏசி பெட்டிகள் கொண்ட ரயில் சேவை முதல்கட்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிலையில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஏசி பெட்டிகள் இல்லாமல் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

தினமும் 200 ரயில்கள் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும், இதற்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் மட்டும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விரைவில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் வகுப்பு டிக்கெட் கட்டணத்துடன் கூடிய இந்த ரயிலில் அனைவரும் பயணிக்க முடியும் என்றும், எந்தெந்த இடங்களில் இருந்து ரயில் சேவை தொடங்குகிறது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன் நாளொன்றுக்கு 12 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Related posts

The Batman shoot suspended as Robert Pattinson tests COVID19 positive

Penbugs

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Penbugs

Man arrested for spreading fake news on Facebook

Penbugs

முகநூலில் சுயவிவரங்களை லாக் செய்யும் புதிய வசதி இந்தியாவில் அறிமுகம்!

Kesavan Madumathy

Indian dance crew ‘The Kings’ wins ‘World of Dance’ reality show; bags 1 Million Dollars!

Penbugs

மே 1 முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி

Kesavan Madumathy

சென்னையில் துவங்கியது ஐபோன் 11 மாடல் தயாரிக்கும் பணி

Penbugs

Police arrests teacher who made 1Cr by working in 25 schools simultaneously

Penbugs

I have no sympathy: Holding lashes out Archer for breaking protocol

Penbugs

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை

Kesavan Madumathy

ISRO LAUNCHES WORLD’S LIGHTEST AND INDIA’S FIRST STUDENT-MADE SATELLITE!

Penbugs

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy