கொரோனாவால் ஏற்பட்டுள்ள வலி, வருங்காலங்களில் பல விதங்களில் கடுமையான வேதனைகளை தரும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் உதவிகளை தொடர்ந்து வரும் நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள பிசாசுத்தனமான அசுர அடி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களைப் பாதுகாப்பது தான் அடிப்படை கடமை என்று மன்ற நிர்வாகிகளுக்கு அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசத்தை அணியாமலும் இருக்க வேண்டாம் என்றும் ரஜினி கேட்டுக்கொண்டுள்ளார்.


Parvathy calls out misogyny in Arjun Reddy in front of Vijay Devarakonda