கொரோனா பாதிப்பால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டித்துள்ளது.
இது குறித்த வருமான வரித்துறையின் டிவிட்டர் பதிவில் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு வருமான வரி தொடர்புடைய விவகாரங்களில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருவதாகவும் அந்த வரிசையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை ஏற்கனவே 2019 – 20 வருமான வரித்தாக்கலுக்கான கால அவகாசத்தை நவம்பர் 30ந் தேதி வரை நீட்டித்தது. அதேபோன்று வரிசேமிப்பு முதலீடு மற்றும் டி.டி.எஸ். தாக்கலுக்கு ஜூலை 31 வரையும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.