Coronavirus Editorial News

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவு படுத்த உதவும் நோக்கில் 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதித் திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு உதவுவதில் பெருமை கொள்வதாக, இந்தியாவுக்கான 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதித் திட்டத்தை அறிவித்துள்ள கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எதிர்காலத்தின் மீதும், அதன் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீதும் கூகுள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த நிதித் திட்டத்தை அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு இந்தியருக்கும் அவரது தாய்மொழியான இந்தி, தமிழ், பஞ்சாபி உள்ளிட்டவற்றில் குறைந்த செலவில் தகவல் தொழிலநுட்ப வசதியை அளிக்கவும், இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய மற்றும் பொருள்களை உருவாக்கவும் இந்த நிதியில் இருந்து முதலீடு செய்யப்படும்.

வர்த்தகத்தை டிஜிட்டல்மயமாக்குதல், சமூக நன்மைக்காக சுகாதாரம்,கல்வி,விவசாயம் ஆகியவற்றில் தொழில்நுட்பத்தை அதிகரித்தல் ஆகியவற்றுக்கும் நிதி பயன்படுத்தப்படும்.இந்த நிதி, அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையில்
மாற்றங்களை எற்படுத்துவது பற்றி சுந்தர் பிச்சையுடன் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தரவுகளின் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு குறித்தும் சுந்தர் பிச்சையுடன் விவாதித்த தாக தெரிவித்துள்ள மோடி, கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள புதிய தொழில் கலாச்சாரம் பற்றியும் தாம் சுந்தர் பிச்சையுடன் ஆலோசித்ததாக கூறியுள்ளார்.

Image Courtesy: PM Modi Twitter Handle!

Related posts

COVID-19: Chennai Corporation’s containment plan

Penbugs

‘Most vulnerable bubble’, ‘Lot of political stuff that goes into it’: Adam Zampa on quitting IPL 2021

Penbugs

Wheelchair cricketer turns labourer due to lockdown

Penbugs

சமூக இடைவெளியுடன் பேருந்து இருக்கை: ஆந்திராவில் அசத்தல்…!

Kesavan Madumathy

Whole India lockdown for 3 weeks: PM Modi addresses nation

Penbugs

தமிழகத்தில் இன்று 5891 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Karnataka: BS Yediyurappa tested Covid19 Positive, hospitalised

Penbugs

COVID19: Sonu Sood takes responsibility of three orphan children

Penbugs

மருத்துவர் பரிந்துரையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயினை உட்கொள்ளாதீர்கள் – சுகாதாரத்துறை

Penbugs

Avoiding public gatherings matters most: Dr Madan Gunasekaran on Corona outbreak

Penbugs

சென்னை ஈசிஆர் முட்டுக்காட்டில் நடிகை குஷ்பு கைது

Penbugs

தமிழகத்தில் இன்று மட்டும் 3581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

1 comment

Joe Pushparaj July 16, 2020 at 9:46 pm

Aruj Jaitley’s Spirit Will be happy..

Leave a Comment