Editorial News

சென்னையில் துவங்கியது ஐபோன் 11 மாடல் தயாரிக்கும் பணி

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மாடல் தயாரிப்பு, சென்னையில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் தொடங்கி விட்டதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது, மேக் இன் இந்தியா திட்டத்திற்கு, குறிப்பிடத்தக்க அளவில் ஊக்கம் அளிப்பதாக அமையும் என்று அவர் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் 20 சதவீத உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், முதன் முறையாக ஐபோன் 11 மாடல் 100 சதவீதம் சென்னை பாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக ஐபோன் எக்ஸ் ஆர் மாடல் உதிரிபாகங்கள் உற்பத்தி இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு தொடங்கியது.

ஐபோன் எஸ்இ மாடலை பெங்களூருவில் உற்பத்தி செய்யவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பாக்ஸ்கான் நிறுவனம் விரிவாக்க நடவடிக்கைக்காக இந்தியாவில் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா…!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Penbugs

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்

Penbugs

FM Nirmala Sitaraman addresses nation | Coronavirus | Atmanirbhar

Penbugs

Vijay Mallya’s case file in Supreme Court goes missing

Penbugs

UP: 60YO gangraped, found unconscious in outskirts

Penbugs

COVID19: Sussanne temporarily moves in with Hrithik to co-parent sons

Penbugs

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.

Kesavan Madumathy

Jamia Millia Islamia Protests: In Pictures

Penbugs

Buffalo racer Srinivas Gowda to attend trials at Bengaluru SAI on Monday

Penbugs

பீடி ,சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை

Penbugs

Breaking: Road Safety World Series tournament called off

Penbugs

Leave a Comment