Coronavirus Editorial News

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவு படுத்த உதவும் நோக்கில் 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதித் திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு உதவுவதில் பெருமை கொள்வதாக, இந்தியாவுக்கான 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதித் திட்டத்தை அறிவித்துள்ள கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எதிர்காலத்தின் மீதும், அதன் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீதும் கூகுள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த நிதித் திட்டத்தை அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு இந்தியருக்கும் அவரது தாய்மொழியான இந்தி, தமிழ், பஞ்சாபி உள்ளிட்டவற்றில் குறைந்த செலவில் தகவல் தொழிலநுட்ப வசதியை அளிக்கவும், இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய மற்றும் பொருள்களை உருவாக்கவும் இந்த நிதியில் இருந்து முதலீடு செய்யப்படும்.

வர்த்தகத்தை டிஜிட்டல்மயமாக்குதல், சமூக நன்மைக்காக சுகாதாரம்,கல்வி,விவசாயம் ஆகியவற்றில் தொழில்நுட்பத்தை அதிகரித்தல் ஆகியவற்றுக்கும் நிதி பயன்படுத்தப்படும்.இந்த நிதி, அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையில்
மாற்றங்களை எற்படுத்துவது பற்றி சுந்தர் பிச்சையுடன் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தரவுகளின் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு குறித்தும் சுந்தர் பிச்சையுடன் விவாதித்த தாக தெரிவித்துள்ள மோடி, கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள புதிய தொழில் கலாச்சாரம் பற்றியும் தாம் சுந்தர் பிச்சையுடன் ஆலோசித்ததாக கூறியுள்ளார்.

Image Courtesy: PM Modi Twitter Handle!

Related posts

தமிழகத்தில் இன்று 5820 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: BCCI president Sourav Ganguly tests negative

Penbugs

The pain was so consistent: Justin Bieber opens up about being suicidal

Penbugs

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

Penbugs

இ பாஸ் தளர்வுகள் மேலும் அறிவிப்பு

Penbugs

Moondru Mugam to have re-release in France this August

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Akshay Kumar donates Rs 25 Crore to PM relief fund

Penbugs

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

3 school boys repeatedly rape classmate for 7 months, posts video online

Penbugs

Spraying disinfectants in open don’t kill corona, can even be harmful: WHO

Penbugs

COVID19: 77 new positive cases in Tamil Nadu

Penbugs

1 comment

Joe Pushparaj July 16, 2020 at 9:46 pm

Aruj Jaitley’s Spirit Will be happy..

Leave a Comment