தமிழகத்தில் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கையொட்டி, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும்.
தமிழகத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், நாளை 4-வது முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து காய்கறி,மளிகைக் கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருக்கும். சாலைகளில் வாகனப் போக்குவரததுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
மீறி ஊர் சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட் களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும், ஆம்புலன்ஸ்களுக்கும், மருத்துவ சிகிச்சைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் வாகனங்களுக்கும், அமரர் ஊர்திகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் எந்தத் தடையும் இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் செய்தி சேகரிக்க செல்லவும் தடை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!