Coronavirus

கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதியை சேர்ந்தவர் பாலக்கோரூ மங்கம்மா.

101 வயதான இந்த மூதாட்டிக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில் குணமடைந்த அவர், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனை இயக்குனர் வெங்கம்மா, கண்காணிப்பாளர் ராம் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மங்கம்மாவின் குடும்பத்தினர்கள் நன்றி தெரிவித்தனர்.

அப்போது மருத்துவர் ராம் பேசுகையில், `உலகமே கொரோனா வைரஸ் கண்டு அச்சமடைந்து வரக்கூடிய நிலையில் 101 வயது மூதாட்டி மங்கம்மா தைரியத்துடன் கொரோனா வைரசை எதிர்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அளிக்கும் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார்.

அவரது மன தைரியம் அவரை தற்போது பூரண குணத்துடன் வீடு செல்வதற்கு உதவியாக இருந்தது. எனவே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எந்த காரணத்தை கொண்டும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் கொரோனாவிலிருந்து முழு குணம் அடையலாம் என்பதற்கு மங்கம்மா ஒரு உதாரணம்’’ என்றார்.

Related posts

தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் – தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

கொரோனா பரவல் அதிகமாவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

NZ PM Jacinda Ardern stays cool as Earthquake strikes during live interview

Penbugs

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

Penbugs

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Penbugs

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பாதிப்பு

Penbugs

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

கடந்த 24 மணி நேரத்தில் 51,256 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Air India Express: One of deceased passengers tested COVID19 positive

Penbugs

Sonu Sood helps Suresh Raina by arranging oxygen cylinder for his aunt

Penbugs

Sam Curran in self-isolation after reporting ‘sickness and diarrhoea’

Penbugs

ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சர்

Kesavan Madumathy

Leave a Comment