Coronavirus

பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டது ரஷ்யாவின் ஸ்புட்னிக் -V தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டதாக கடந்த ஆகஸ்ட் 11 அம் தேதி, முதல் நாடாக ரஷ்யா அறிவித்தது.

மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தியதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின்.

எனினும் ரஷ்ய தடுப்பூசியின் செயல் திறன் பற்றி நிபுணர்களும் , உலக சுகாதார நிறுவன ஆய்வாளர்களும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ‘ஸ்புட்னிக்-v தடுப்பூசி பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டதாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கோவிட் 19-க்கு எதிரான தடுப்பூசியான ஸ்புட்னிக் -V வின் முதல் தொகுப்பு சிவில் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

தேவையான தகுதிச் சோதனைகளுக்குப் பிறகு இந்த தடுப்பூசி வெளியிடப்பட்டுள்ளதாகவும், மண்டலவாரியான விநியோகம் விரைவில் துவங்கும் எனவும் ரஷ்ய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது

Related posts

Varalaxmi Sarathkumar distributes food to 1600 migrant workers

Penbugs

தமிழகத்தில் இன்று 5524 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

Steve Smith thinks saliva ban is not a great move

Penbugs

Petition filed in Madras High Court seeking arrest of Kohli, Tamannah

Penbugs

Millions of kids might not return to school at all: UN on COVID19 impact

Penbugs

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று

Kesavan Madumathy

TN recruits 530 doctors, to deploy 200 ambulances

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1,437 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 21,546 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Sonu Sood airlifts 177 girls stuck in Kerala

Penbugs

Leave a Comment