Editorial News

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59இல் இருந்து 60ஆக உயர்த்தப்படுவதாகவும் அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கல்வி நிறுவன ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. இந்த வயது வரம்பை கொரோனா காலத்தில் கடந்த ஆண்டு 59ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

Paytm removed from Google Playstore for violations

Penbugs

சென்னையில் இன்று (17-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை

Penbugs

Power shutdown in part of Chennai on October 8

Penbugs

COVID19: TNSDC partners with Coursera to train 50000 unemployed youths

Penbugs

Bigg Boss Tamil 4, Day 75, Written Updates

Lakshmi Muthiah

Donald Trump nominated for Nobel Peace Prize

Penbugs

PUBG Corporation responds to PUBG MOBILE ban in India

Penbugs

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

Sheep sold for £367,500 at auction

Penbugs

Paul Pogba tested positive for COVID19

Penbugs

AR Rahman is accused by Income Tax dept of routing income to his foundation

Lakshmi Muthiah

சென்னை மெட்ரோ ரயில் ; இன்று இலவச பயணம்

Penbugs

Leave a Comment