பெங்களூரு வருபவர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1600 பேருக்கு மேல் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து வெளி மாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
பஸ், ரயில், சொந்த கார் உட்பட எந்த ஒரு வாகனத்தில் பெங்களூர் வருவதற்கும் இந்த விதிமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.