Penbugs
Editorial NewsPolitics

சென்னை ஓஎம்ஆர் சாலையில் சுங்க வரி நிறுத்தம்: எவ வேலு அறிவிப்பு

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் 4 இடங்களில் சுங்க வசூல் நிறுத்தப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு அறிவித்துள்ளார்.

சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளை விரிவாக்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நான்கு இடங்களில் சுங்க வசூல் நிறுத்தப்படுகிறது.

மக்கள் அங்கு பயணம் செய்ய டோல் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

கீழ்க்கண்ட நான்கு இடங்கள் :

பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளில் இனி சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment